Saturday, September 10, 2011

வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
- உயிரோடு இருப்பதா?
- மகிழ்ச்சியாக இருப்பதா?
- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
- தத்துவங்களின் அணிவகுப்பா?
.... இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா...? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.



ஒரு ஜெர்மனிய பழமொழி, ``அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்'' என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
- நம்மைவிட உடலில் பலசாலி யானை
- நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
- நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

நரை முடியை த‌வி‌ர்‌க்க...

.
நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.
தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும்.
ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது.
தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு தீரும்.
துவரம் பருப்பு, மருதாணி இலை ஆகியவற்றை தயிரில் ஊறவைத்து அரைத்து பாதத்தில் பூசினா‌ல் ‌பி‌த்த வெடி‌ப்பு குறையு‌ம்.
குளிர் காலத்தில் பாதங்களில் சீரக எண்ணெயை கொதிக்க வைத்து தடவி வரலாம்.
மு‌ல்தா‌னிமெ‌ட்டியை த‌ண்‌ணீ‌ரி‌ல் குழை‌த்து முக‌த்‌‌தி‌ல் தட‌வி வர முக‌ம் மல‌ர்‌ச்‌சியடையு‌‌ம்.
உ‌ங்க‌ள் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற நக‌ப் பூ‌ச்சுகளை ம‌ட்டு‌ம் பூசு‌ங்க‌ள். அழகாக இரு‌க்கும்.
மாத‌த்‌தி‌ல் ஒரு வாரமாவது நக‌ங்களை பூ‌ச்சு‌க்க‌ள் இ‌ல்லாம‌ல் வையு‌ங்க‌ள்.
முடி‌யி‌ன் நு‌‌னி‌யி‌ல் வெடி‌ப்புக‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க முடியை‌ எ‌ப்போது‌ம் க‌ட்டியே வையு‌ங்க‌ள்.
க‌ண்களு‌க்கு எ‌ந்த ‌வித அல‌ங்கார‌ம் செ‌ய்தாலு‌ம் உற‌ங்கு‌ம் போது ந‌ன்கு கழு‌வி ‌விடவு‌ம்.
முட்டையின் வெள்ளைப் பகு‌தியை மட்டும் தலையில் தேய்‌த்துக் குளித்தால் முடி மிருதுவாக இருக்கும்

விண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு



இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் தகவல் களைப் பரிமாறிக் கொள்ள, மைக்ரோசாப்ட் விரும்புவதால், அந்த வலை மனையைத் தொடங்கி யுள்ள தாகவும் அதில் அறிவிக்கப் பட்டுள்ளது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 பதிப்பு முழுவதுமான புத்துணர்ச்சியுடன் காட்டும். நிறைய புதிய விஷயங்கள் அதில் தரப்பட்டுள்ளன. இந்த பதிப்பில் மட்டுமே காணப்படும் வசதிகள் பல இதில் அடங்கியுள்ளன. எனவே இவற்றை அறிவிப்பு செய்திட இன்னும் சில நாட்களில் விவரங்கள் அறிவிக்கப் படும் என்று இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடிப்படை இயக்க விஷயங்கள் முதல் யூசர் இன்டர்பேஸ் வரையிலான பல தகவல்கள் தரப்பட இருக்கின்றன.
இப்போதைக்கு ஒன்று மட்டும் மிகப் பலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்கும் கம்ப்யூட்டர்கள் அனைத்தும், விண்டோஸ் 8 சிஸ்டத்தையும் இயக்க முடியும். எந்தவிதமான ஹார்ட்வேர் மேம்பாடு தேவைப்படாது.
சென்ற மே மாதத்தில், மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மர், வரும் 2012ல் உறுதியாக விண்டோஸ் 8 வரும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், அது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால், இந்த புதிய வலைமனையும் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Sunday, September 4, 2011

ரோஜா மலர்களின் நிறங்களும் அதன் சிறப்புகளும்.




ரோஜா மலரை விரும்பாதவர்கள் அபூர்வம். காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரினூடாக தங்களது அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள்.

இந்த ரோஜாக்கள் பல நிறங்களில் அமைந்து பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

அதேவேளை, ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களை, சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாக கொள்ளப்படுகிறது.

ரோஜாக்களின் நிறமும் அவற்றின் அர்த்தங்களும் பின்வருமாறு:



சிவப்பு ரோஜா : காதல்

சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில் பல கலாசாரங்ளில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் ரோஜா : மகிழ்ச்சி, நலம்
வரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் ரொமான்ஸ் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.

இளஞ்சிவப்பு ரோஜா: காதல், நன்றி, மதிப்பு
இளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு என்பனவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது.

கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது.

மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு என்பவற்றை வெளிப்படுத்துகிறது. அதேவேளை, அனுதபாபத்தை தெரிவிப்பதற்கும் இளம் சிவப்பு நிற ரோஜா பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளை ரோஜா: தூய்மை, அப்பாவித்தனம், அனுதாபம், ஆன்மீகம்

வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இந்த வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.

அதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.

செம்மஞ்சள் ரோஜா: ஆர்வம், மதிப்பு

மஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது.

ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்புச் செய்யப்படுகிறது.

ஊதா ரோஜா: வசீகரம், ராஜகம்பீரம்,கண்டவுடன் காதல்

ஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.

Saturday, September 3, 2011

தமிழ் சினிமா வரலாறு

இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் போட்டோப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை போட்டோன் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.
1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் போட்டோங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை.

திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.

1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது.

முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார்.

முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.

முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.

பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.

சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் போட்டோடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போட்டோல், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது.

திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின.

அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம்.

இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த போட்டோயம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு போட்டோமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம்.

உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.

மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.

1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.

1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).

ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போட்டோன் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.
1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக போட்டோயத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக போட்டோணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம்.
அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் போட்டோடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் போட்டோடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் போட்டோடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.

1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது).

புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போட்டோன் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே.

எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு.

1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக உருவெடுத்தது. மணிரத்தினத்தின் சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் ஜி.வி.பிலிம்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை துவங்கினார்.

1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் போட்டோயாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் அதே மாதிரி கதைகளை நாடிப் போயினர். ஜாதிப் பெயரைக் கொண்ட படங்களும், நிலப் பிரபுத்துவத்தை போற்றும் வகையில் அமைந்த கதைகளும் (நாட்டாமை-1994) வர ஆரம்பித்தன. இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் டோரோன்டோ போட்டோல் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்ப்பெற்றது. மணிரத்தினத்தின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பரவ ஆரம்பித்ததும் இந்த ஆண்டுகளில்தான். ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரகுமானின் புகழ் அகில இந்திய அளவில் வெளிப்பட துவங்கியது.

இந்த ஆண்டுகளின் முக்கிய அம்சம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தும் அவரது படங்களின் வர்த்தக வெற்றியும்தான். அவரது நட்சத்திர அந்தஸ்த்து பாட்ஷா (1995) போன்ற படங்கள் மூலம் பன்மடங்கு உயர்ந்தது. அவரது ரசிகர் மன்றங்களுக்கு அரசியல் பலம் உண்டு என்று தலைவர்கள் பலர் நம்பினார்கள். 1996ம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பல தேசிய விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமலஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்பி.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆயினும், தமிழ் திரைப்படத்தின் உள்ளடக்கம், ஆரம்ப வருடங்களில் இருந்த அளவிலேயேதான் உள்ளது. சித்தாந்தம் மற்றும் தர ரீதியில் வளர்ச்சியில்லை. இயக்குநர்கள் அனைவரும் பாட்டு, குழு நடனம், துரத்தல் சண்டை, பாலியல் கிளுகிளுப்பு இவைகளையே ஒரு ஜனரஞ்சகமான கேளிக்கை சாதனமாக செயல்படுத்தினர். வியாபாரத்தனமே முக்கிய அம்சமாக நிலைத்தது. இந்த நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரவிய தொலைக்காட்சி தமிழ் திரைப்படத்துறையின் மற்றொரு விரிவாக்கமாக உறைந்து விட்டது. படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் போல தமிழ் திரைப்படங்கள் உருவெடுத்தன. இன்றும் அதே பாணியில் தொடருகின்றன. திரைப்படத்தின் பிற போட்டோணாமங்களான விவரணப்படங்கள், கார்டூன் படங்கள், செய்திப் படங்கள் போன்றவை உருவாகவில்லை.

ஐயாயிரம் படங்களுக்கு மேல் தயாரித்தும், அகில அளவில், திரைப்பட விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் கவனிக்கப்படுவதில்லை. விமர்சன ரீதியில் வெகு சில படங்களே விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்பட ரசனை மக்களிடையே வளராததுதான். சங்கீதத்தைப்பற்றி விமர்சிக்கவோ, நடனத்தைப் பற்றி எழுதவோ அந்தக் கலை வடிவத்தின் குணாதிசயங்கள் பற்றி போட்டோச்சயம் தேவை என்பது நமக்குத் தெரிகிறது. இந்த மரியாதையை நாம் திரைப்படத்திற்கு தருவதில்லை.

தமிழ்த் திரைப்படம் பற்றிய ஆய்வில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. (சில தமிழ் துறைகளில் திரைப்படம் குறித்த ஆய்வு நடக்கிறது). திரைப்படத்தின் தனிப்பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் பற்றிய போட்டோச்சயம் மக்களிடையே ஏற்படவில்லை. எந்தக் கலைவடிவமும், கேளிக்கை சாதனமும் மக்கள் வாழ்விற்கு செறிவும், வளமும் ஊட்டுவதாக அமைய வேண்டும். தமிழ் திரைப்படம் அவ்வாறு உருவாவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை