Monday, August 15, 2011

புதிய ஏழு உலக அதிசயங்கள்



உலகின் புதிய ஏழு அதிசயங்கள் என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை ஜூலை 7 2007 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன[1]

100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது[2]. வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது[1].

இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்கு கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டனர், மற்றவர்கள் இந்த போட்டியை அலட்சியம் செய்தனர் அல்லது விமர்சித்தனர்[2][1]. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ 2007 இல் இந்த தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது[3][4]. கூடுதலான நினைவுச்சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் அல்லது தேசிய இணையத்தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர்[5]. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சுவார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது[6].

2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்த பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை[6]. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்கு தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது[7][8].

உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர்[9]. 2007 இல் [[இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் டிசம்பர் 31, 2008 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இறுதிக்கு தேர்வு பெற்ற 21 அடையாளங்கள் 2010 கோடை வரை வாக்களிப்புக்குட்பட்டதாக இருக்கும்.


வரலாறு

உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கும் தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை (Colossus of Rhodes) மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனையவை மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன[10].
புதிய ஏழு அதிசயங்களுக்கான இறுதி தேர்வுகள்.

நியூ7ஒன்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின் படி[11], சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணையத் தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார்[1]. இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். நவம்பர் 24 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. ஜனவரி 1, 2006 இல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும்,[12] ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறுபேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது[13].

ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என.

இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது[14].

யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார்[15]. நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல[16].

பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது, இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விஷயங்கள் என்பதாகும்.[17]உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை,[18] உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது.[8][19][2]உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் (...) குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்ஸின் ஒரு இலக்காக இருந்து வந்திருக்கிறது."இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஒரு அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC.

Saturday, June 11, 2011

இதய ஆரோக்கியத்துக்கு.............




ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் 'டிரான்ஸ்ஃபேட்'னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.

எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:

* மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.

* ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.

* பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

* 'ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்'னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:

* கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,

* அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

* ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

* தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

Sunday, February 20, 2011

எளிதில் குணப்படுத்தலாம் ஞாபக மறதி நோயை!


திடீரென்று கமலநாதனுக்கு சிறு விஷயங்களில் மறதி ஏற்பட்டது. கார் சாவியைத் தொலைத்து விட்டார். எங்கு வைத்தோம் என்று ஞாபகம் வரவில்லை.
சிறந்த வக்கீலான இவருக்குப் பெயர்கள், சாமான்கள் மறந்து விட்டன. சீக்கிரத்தில் பண விஷயங்கள், கொடுக்கல் வாங்கல் என்று ஒவ்வொன்றாக மறக்கத் துவங்கியது. தன்னைப் பார்க்க வந்த வாடிக்கையாளரிடம் பணம் வாங்க மறந்து விட்டார்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுது சட்டென்று என்ன பேசுகிறோம் என்று மறந்து போய் திகைத்து நிற்பார்.
நல்ல அறிவுத்திறன் கொண்ட கமலநாதனின் நடவடிக்கை அவரது மனைவிக்குப் பயத்தை அளித்தது. ஹைதராபாத் நகரில் உள்ள, நிஜாம் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அங்கு ஞாபக சக்தி க்ளினிக்கில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஏ. சுவர்ணாவைச் சந்தித்தார்.
மிகச் சரியான சமயத்தில் கமலநாதன் எங்களிடம் வந்ததால் உடனே அவரை பரிசோதித்தேன். ஒரு சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் மூலம் அவர் ஞாபக மறதியினால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று புரிந்தது. அதனால் "மூளை ஸ்கேன்' செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை.
ஆனால் அவருடைய வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை எற்படுத்தும்படி கூறினேன். ஆறு மாதங்களில் அவரிடம் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
ஞாபக மறதி என்பது 50 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இதை MCI - (Mind Congnitive Impaitment)அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மறுத்துவம் கூறுகிறது.
ஆனால் இது பின்னாளில் உள் புதைந்திருக்கும் மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சனைகள் அல்லது அல்ஜெமர்(Alzheimers) எனப்படும் ஞாபக மறதி பிரச்சனையாக உருவாக்கலாம்.
நோயாளிகள் நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் தங்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றி கவலைப்படுவார்கள்.
எம்சிஐ ஒரு முழு ஞாபகமறதி. அல்ஜெமர்ஸ் ஆக உருவாகலாம். சில சமயங்களில் இவை ஆரம்பகால அறிகுறியாக இருந்தாலும், அவர்களது மருத்துவ சரித்திரம் மிகச் சரியாக இருந்தாலும், நாங்கள் நோயாளிகளை மூன்று மாதம் ஒருமுறை இங்கு வரும்படி கூறுகிறோம். மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து நிலைமையை உணர்கிறோம். உதாரணத்திற்குக் கமலநாதன் தன் வயதை மீறிய பணி, தன மகனின் படிப்பைப் பற்றிய கவலை, இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், ஆகியவற்றால் ஞாபக மறதி ஏற்பட்டது என்று விவரங்களைக் கூறுகிறார் மருத்தவர் சுவர்ணா.
ஞாபகமறதி என்பது ஒரு வியாதியாக மாறலாம் என்பதை இன்று மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சாவிகளை மறந்து விடுவது, உறவினர்களின் பெயர்கறை மறந்து விடுவது போன்றவை பின்னாளில் பிரச்சனை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்துள்ளனர்.
முக்கியமான விஷயங்களை மறப்பதில்லை. ஆனால் சிறு விஷயங்களை மறக்கும் தன்மையைப் பற்றி யோசிக்கிறார்கள். வீட்டிலோ அல்லது பணியிடங்களிலோ மன அழுத்தம் ஏற்படுவது சகஜம்தான். வேலைப்பளு, சமீபத்தில் ஏற்பட்ட உறவினர் இறப்பு அல்லது வளரும் பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சனை என்று மன அழுத்தத்திற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.
இந்தப் பிரச்சனைக்கு ஆண்கள் அதிகமாக உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கடுமையாக உழைத்து, களைத்து இருக்கும் மாணவர்களும் வருகின்றனர். இவர்கள் தினசரி ஏற்படும் விஷயத்தை மறப்பதில்லை ஆனால் பரீட்சை எழுதுகையில் ஏதோ ஒன்று அவர்களுக்குத் தடை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர்.
""படித்தவர்களும், விஷய ஞானம் உள்ளவர்களும் ஞாபக மறதியைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். உத்தியோகத்தில் முன்னேற்றப் பாதையில் உள்ள இவர்கள் இதில் மேலும் முன்னேறத் துடிக்கின்றனர்.
ஞாபக சக்தியைத் தூண்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா எனும் கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட மாத்திரைகள் உலகிலேயே இல்லை என்று கூறி அவர்களது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க ஆலோசனைகளை எடுத்துக் கூறுகிறேன்'' என்று கூறுகிறார் டாக்டர் சுவர்ணா.
டிமென்ஷியா எனப்படும் முழு ஞாபகமறதி நோய் சிறுசிறு ஞாபகமறதி அவதிகளில்தான் துவங்குகிறது. மூளையில் இருக்கும் உயிரணுக்கள் முற்றிலுமாக அழிந்து விடுவதுதான் டிமென்ஷியா ஆகும். இந்தியாவில் 3.2. கோடி மக்கள் இதனால் அவதியுறுகின்றனர்.
இன்று மக்களிடையே பரவலாக உள்ளது ஆல்ஜெமர்ஸ் (Alzeimers) நோய்தான். 65 வயதிற்குமேல் உள்ள 100 இந்தியர்களில் 3-5 பேருக்கு இந்நோய் உள்ளது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தைராய்டு சுரப்பிகளின் பணியை, மற்றும் பி-12 சத்தின் குறைபாடு இவற்றை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம். அறியும் சக்தி, நடத்தை இவற்றின் பரிசோதனைகளைச் செய்து பிரச்சனையைக் கண்டறியலாம்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஎம்எஸ் இல் ஒரு ஞாபக மறதி நோய்க்கான பிரிவு தொடங்கப்பட்டது. இந்நோய்க்கான காரணவியலைக் கண்டுபிடிக்க, நரம்பியல் மற்றும் மனோதத்துவ முறை, ஸ்கேன் மூலம் அறிதல் மற்றும் காரணத்திற்கான பாகுபாடுகள் ஆகியவற்றைத் தீவிர ஆராய்ச்சி செய்தனர்.
* 21% மனத்தளர்ச்சியினால் ஏற்பட்ட ஞாபக மறதி நோய்.
* சரியான காரணத்தை அறிய இயலாமல் 59%
* நல்ல ஞாபகசக்தியுடன் 20% பேர்.
* 30% பேர் எம்சிஐயினால் அவதிக்குள்ளாகிறார்கள். இவர்களுக்குப் பாரிசவாயு தாக்குதல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஆராய்ச்சியின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
*15 % பேருக்கு வயதையும் மீறிய அளவில் மூளை சுருங்கியுள்ளது. இவர்களை 13 மாதங்கள் பரிசோதனை செய்ததில் 11% பேருக்கு டிமென்ஷியா அதாவது முற்றிலும் ஞாபக மறதியை இழப்பது எனும் நோய்த் தாக்குதல் ஏற்படுகின்றது.
இவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் அதிக உடல் எடை முன்பே உள்ளது என்றும் கண்டறியப்பட்டது.
* 47% பேருக்கு சீக்கிரமாகவே டிமென்ஷியா நோய் ஏற்படுகிறது. என்று அறியப்பட்டது. ஆனால் மற்ற முன்னேறிய நாடுகளில் முன்பு எடுத்த புள்ளி விபரங்கள் 7-30% வரைதான் இந்நோய் ஏற்படுகின்றது என்று கூறியது.'' இவ்வாறு ருக்ஸானா அன்சாரி கூறுகிறார்.
இவர் அல்ஜெமர்ஸ் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நோய்களின் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
இந்நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களது மூளையின் எப்பகுதி பாதிக்கப்படுகின்றது என்பதைப்பொறுத்து அவர்களது பாதிப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
முதல் அறிகுறி
* ஞாபக மறதி. இதில் சந்திப்புகளை மறப்பது.. சமீபத்தில் பேசியது அல்லது நடந்த நடப்புகளை மறப்பது.
*யதார்த்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பது புது இடங்களில் குழப்பம், மாதம் தேதிகளை மறப்பது, வீட்டிற்குப் போகும் வழியை மறப்பது.
* பேசுவதில் மிகவும் சிரமம். எளிமையான, நன்கு அறிந்தவற்றை மறப்பது, தவறான வார்த்தைப்பிரயோகம், வார்த்தைகளை மாற்றி மாற்றிக் கூறுவது.
*நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தாரை முற்றிலும் மறந்து விடுவது.
*வங்கிக் காசோலை எழுதுவது, பணத்தை எண்ணுவது, தொலைபேசியினை உபயோகிப்பது போன்ற சற்றே கடினமான விஷயத்தைச் செயலாக்கச் சிரமப்படுவது.
*மிகுந்த மனத் திருப்தியுடன் செய்து வந்த பணிகளைச் செய்யாமல் நிறுத்துவது.
*மற்றவர்களைத் தொந்தரவிற்கு உள்ளாக்கும் பணிகளைப் புரிவது.
*தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மறப்பது, பல் தேய்க்க, உடை உடுக்க, குளிக்க மறந்து போவது.
நன்றி-மஞ்சரி

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்......


தட்பவெப்பம்,உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கிறார்
அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் ஜெயந்தி ஈசன்.

பாதுகாப்பு முறைகள்:
* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.
* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.
* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.
* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.
* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.
* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.
*பிரச்னை உள்ளவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா: அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. இதன் மூலம் ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும். மேலும் சில சிப்ஸ் வகைகள் சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றையும் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், தானியங்கள், முழு கோதுமை உள்ளிட்டவைகளுக்கும் தடா போடவும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
*அக்ராகாரம் வேர், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
?*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 100 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.
*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடிக்கலாம்.
*வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.
*இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் அலர்ஜியால் உண்டாகும் வாந்தி நிற்கும்.
*சாப்பிட்ட உணவு அலர்ஜியானால் கொத்தமல்லி இலைச் சாற்றுடன் உப்பு கலந்து குடித்தால் நஞ்சு வெளியேறி விடும்.
*உருத்திர சடை இலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு குணமாகும்.
*எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும். அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.

Sunday, February 6, 2011

அண்மையில் நான் படித்த சில சினிமா செய்திகள்


3 Idiots Tamil remake is Nanban

Ending all speculation and confusion about the Tamil title of 3 Idiots, its producers Gemini Film Circuit have announced that the movie will be titled Nanban. The announcement from the film giant also confirmed Vijay, Srikanth and Jiva as the three leads in the movie. Vijay will appear as the unorthodox genius Rancchod Das, which was played by Aamir Khan. Jiva and Srikanth will appear as the naïve Farhan Qureshi and Raju Rastogi, which were played by Madhavan and Sharman Joshi. Ileana D'Cruz will appear in the role played by Kareena Kapoor, and Sathyaraj will appear as the insensitive professor Virus, which was played by Boman Irani. The movie will also be released in Telugu as 3 Rascals.



Rajni's next film Rana.....




After the super hit Enthiran, Superstar Rajinikanth is likely to team up with ace director K.S. Ravikumar. The film, which is reportedly titled Rana, will be co-produced by Rajni and Eros International. The latest buzz is that the film will be a period film and Rajinikanth will sport a different look in it.

Rajni will be seen in a triple role and A.R. Rahman will compose music for this magnum opus. The cinematographer would be Ratnavelu and the special effects will be handled by Rajni’s daughter Soundarya. Rana will be made simultaneously in Tamil, Telugu and Hindi.

தமிழ் குறும்படம்....